Showing posts with label Gautham Menon. Show all posts

கெளதம் + காதல் - இறுதி பகுதி (நீதானே என் பொன்வசந்தம்)

படைப்புகளில் TYRANNY OF TRIVIA என்ற அம்சம் ஒன்று உண்டு..ஒரு தொகுப்பின் முதல் அத்தியாயம் ஏற்படுத்தும் கிளர்ச்சியை மீண்டும் மீண்டும் செய்தால்..அல்லது ஒரு MAGIC ஐ மறுபடி மறுபடி செய்தால் அது முதலில் ஏற்படுத்திய வசீகரத்தைத் தக்க வைக்காது என்பது போல..இந்தத் தொடரை உதாரணமாக எடுத்துக் கொண்டால் கூட முதல் இரண்டு பகுதிகளில் வந்த பின்னூட்டங்கள் மூன்றாம் பகுதிக்கு வரவில்லை....அதைப் போல, பெருவாரியான மக்கள் TRIVIAL எனக் கருதி, பெரிதும் ரசிக்கப்படாமல் போன படம் நீ.எ.பொ...இந்தப் படத்தை முதல் நாள் தியேட்டரில் பார்த்த பொழுது கலாய்த்துத் தள்ளி விட்டார்கள்..அதனால் படத்தின் உட்கூறுகளோடு பெரிதாக ஒன்ற இயலவில்லை...பின்னர் மீண்டும் பார்த்த பொழுது, கெளதம் ஸ்டைல் MAKING AND CONVERSATIONS தவிர்த்து விட்டு பார்த்தால் " இது காதலின் வேறு DIMENSION" எனத் தோன்றியது..


இந்தப்படம், வழக்கமான RANDOM EVENT படி அமைந்த காதலைப் பேசவில்லை..வருண்-நித்யாவின் வாழ்க்கையில் குழந்தை பருவம், மாணவர் பருவம் என்று இருவேறு பருவங்களில் "ஈர்ப்பு" மலர்ந்துள்ளது...நித்யாவின் பார்வையில், வருண் தான் முன்சொன்ன இரண்டு ஈர்ப்புகள் உடையக் காரணம்..படம் தொடங்கும் வேளையில் இருவரும் கல்லூரி பருவத்தில் இருக்கின்றனர்.."வானம் மெல்ல" பாடல் மூலம் முன்பு எழுந்த இரு ஈர்புக்களும் நமக்கு காட்டப்படுகின்றன..கிட்டதட்ட "குஷி" போல இருவரும் இறுதியில் சேரப்போகிறார்கள் என்று மனதளவில் பார்வையாளரைத் தயார் செய்து விடுகிறது இந்த காட்சிகள்..

படத்தின் இன்னொரு பரிணாமம்...காதலில் எழும் வர்க்க உரசல்கள்..வருண் நடுத்தர வர்க்கம்..கெளதமின் என்னய்யா படங்களைப் போல அல்லாமல், ஒரு அப்பட்டமான, COST BOUND, நடுத்தர வர்க்கம்..வருண் நித்யாவை கூட்டமான ஞாயிற்றுக்கிழமையில் நடுத்தர உணவகத்துக்கு அழைத்து செல்கிறான், வருண் அண்ணனின் பெண் பார்க்கும் படலத்தில் அவர்களது "வர்க்கம்" கேள்விக்கு உள்ளாகிறது..நித்யா, ஆஸ்திரேலியா, எடின்பரோ என டூருக்கு செல்ல, வருணால் ஏற்காடு, ஊட்டியே செல்ல முடிகிறது..கார் ஓட்டுவதில் கூட வருணுக்கு ஒரு INFERIORITY COMPLEX எட்டிப்பார்க்கிறது..அதனாலே, வருண் "வேலை" என்ற ஒன்றை தனது வாழ்வின் பிரதானமாகக் கருதுகிறான்..

நித்யா..உயர்தர வர்க்கம்..தனது உலகத்தை வருணுக்கு AFFIX செய்துக் கொள்பவள்..பின்னர் அவனது உலகில் தன்னைத் தவிர வேறு PREFERENCES ம் இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.."நான் உனக்காக என்னோட FRIENDS, CAREER எல்லாத்தையும் SACRIFICE பண்ணேன்..ஆனா நீ" என்ற EGO தான் படத்தின் PLOT POINTS..நித்யாவின் படி, வருணின் CORE PERSONALITY சுயநலமானது...தனது சுயநலத்துக்காக அவளது காதலை உதாசீனப்படுத்திகிறான் என்று அவளது EGO அவளை எச்சரிக்கும் நொடியில் தான் வருண் மீது கொண்ட "கண்மூடித்தனமான காதலைத்" தூக்கி எறிந்து "I HATE YOU" என்கிறாள்...மொட்டைமாடி வாக்குவாதத்தின் இறுதியில் இதைத் தான் கூறுகிறாள்..அடுத்து கடற்கரை ஓர வாக்குவாதத்தில், "இப்போ உன் LIFE-ல உள்ள குட்டி குட்டி BOX- களை எல்லாம் டிக் அடிச்சிட்டு, இப்போ இங்க வந்திருக்க..இப்போ இந்த BOX ல, என்ன எழுதிருக்கு வருண்..நித்யானா?? இல்ல கல்யாணம் பண்ணிக்க ஒரு பொண்ணுன்னா" என்று கேட்பதும் தான் படத்தின் CRUX..

மொட்டைமாடி வாக்குவாதம், கடற்கரை ஓர வாக்குவாதம் ஆகிய இரண்டில் எழும் தார்மீக EGO க்கள், வருண் கல்யாணத்தின் முந்தைய இரவில், நொறுங்கிப் பொய், அது விலக்கி வைத்திருந்த காதல் முழுமை நிலை அடைகிறது,,,இதுவும் "குஷி" பாணி EGO உடைதல் தான்...திரைப்பட பாணியில், இது சற்று DRY AREA..அதனால்தான், "குஷி"யில் மும்தாஜும், "சச்சினில்" பிபாஷாபாசுவும் இந்த பகுதியை உந்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருப்பார்கள்..கெளதம் காதலை..அதன் " தூய வடிவத்தில்", அதன் நிறைகுறைகளோடு, ஒரு MICROSCOPE மூலம் அதன் வெளிப்பாடுகளைக் கடத்த முயன்று இப்படத்தில் வெற்றி பெற இயலவில்லை....மேலும், ஒரு சராசரி ரசிகனுக்கு வருணின் "INNER PSYCHE" ஐ EXPLICIT ஆக்கவோ, எதனால் CONFLICT எழுந்தது என தெளிவுற விளக்கவோ படத்தால் இயலவில்லை..முடிவும், வழக்கமான சினிமா ரீதி.."வருண்-நித்யா காதல் பயணத்தின் சில தருணங்கள்" என்று கெளதம் அதன் போக்கில் விட்டு விட்டார்..(இதை வெற்றிகரமாக செய்தவர் எஸ்.ஜே.சூர்யா.)

வருண், வழக்கமான கெளதம் பாணி MAD IN LOVE நாயகன் அல்ல..நித்யா, "ஜெஸ்சி" போல முரண்பாடுகள் நிறைந்த காதலியும் அல்ல..இதுதான் நான் ஆரம்பத்தில் சொன்ன TRIVIALITY..

கெளதம் + காதல்(பகுதி மூன்று)

- பகுதி மூன்று (விண்ணைத்தாண்டி வருவாயா)
VTV படத்தைப் பார்த்து விட்டு சில நண்பர்கள், "கெளதம் என் கதைய அப்படியே எடுத்து வெச்சிருக்கான்டா?? என் ஆளு அப்படியே ஜெஸ்சி மாதிரி" என்று கூறினார்கள்..பிறகு தான் தெரிந்தது, பல பேர் இப்படியே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் என்று...படத்தை குடி போதையில் தொடர்ந்து பத்து நாட்கள் பார்த்துவிட்டு, EX காதலிக்கு ஃபோன் பண்ணி குடைச்சல் கொடுத்த நபரும் எனக்குத் தெரியும்..நீலாம்பரி போல, ஜெஸ்சி தன் வீட்டில் இருந்து வெளிவந்து கார்த்திக்கிடம் "அதான் அப்பவே சொன்னேன் கார்த்திக்..இதெல்லாம் சரி வராதுன்னு..நீதான் புரிஞ்சிக்கல" என்று சொல்லும் சீனையும், பார்க்கில் கார்த்திக், "அவளுக்கு சினிமா....பிடிக்காது.." ன்னு பேசும் காட்சியையும் தேயத் தேய ஓடவிட்டநபர்களும் இருக்கிறார்கள்..அதுதான் ஜெஸ்சி...ஜெஸ்சியில் மேற்சொன்ன "கார்த்திக்" கள் தங்கள் இழந்த காதலியைப் பார்த்தார்கள்...


படத்தைப் பார்க்கும், 45 + நபர்களுக்கு, "என்னங்கடா இவனுங்க..வழ வழனு பேசிக்கிட்டே இருக்காங்க..இங்க உக்காந்து பேசுறாங்க..அங்க உக்காந்து பேசுறாங்க.புடிக்கிதுங்கற, புடிக்கலங்றா, கல்யாணத்த நிறுத்துறா, இவனையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறா..பெரிய இவளா அவ" எனத் தோன்றும்..காரணம், நம் சினிமா காதல்களில், சண்டை போட்டாலோ, காப்பாற்றினாலோ, தலையும் தலையும் மோதிக்கொண்டாலோ, உதடும் உதடும் ஒட்டிகொண்டாலோ காதல் "குபீர்" என முகிழ்க்கும்..பிறகு அது வளர, இருவரும் சேர்ந்து இரண்டு டூயட்கள் பாடினாலோ, ஊர் சுற்றினாலோ போதுமானது..எதிர்ப்பு ஒன்று அப்பாவிடம் இருந்து வரும், இல்லை முறைமாமன், இல்லை ஏதோவொரு EXTRINSIC FACTOR.."காதலுக்கு மரியாதை" படத்தில் லேசாகக் கோடு கிழித்து, காதலர்களின் அகரீதியான திடும் மாறுதலைக் காட்டினார்கள்...அது கூட அவ்வளவு EVIDENT ஆக அல்ல..
காதலிக்கும் பெண், தனக்கே ஒரு வளையத்தைப் போட்டுக்கொண்டு, அதனுள் குழம்பி குழம்பி சுற்றி வந்தால்?? அதுதான் "விண்ணைத்தாண்டி வருவாயா??" கார்த்திக்-ஜெஸ்சி இருவரது வாழ்க்கையின் துண்டுச் சம்பவங்களை பருந்து பார்வையாக பார்த்த உணர்வு தான் படம்..ஏன், கார்த்திக்குக்கு கூட, தன் காதலை META வடிவத்தில் எடுத்துப் பார்த்துவிடத்தானே தோன்றுகிறது..அதை, EX காதலியிடம் போட்டுக் காட்டும் அளவிற்கு மன முதிர்ச்சி உடைய, மேம்பட்ட ஆளாகவும் "காதல்" அவனை சுத்திகரிக்கிறது..ஒருவகையில் பார்க்கும் நம்மையும், முன்னாள் காதலியையோ, இன்னாள் காதலியையோ, எதிர்கால காதலியையோ உருவகப்படுத்த வைத்து, CATHARISIS செய்யும் கருவியாக படம் இயங்குகிறது..
ஜெஸ்சியின் மனநிலையை புரிந்துக்கொள்ள முயல்வது, குழம்பிய தண்ணீரில் நீர்நெளிவுகளை கணிப்பதற்கு சமம்..ஏன் அவள் கார்த்திக்கை முத்தமிட அனுமதித்தாள்?? அதற்கு மறுநாளே வந்து அவனை வறுத்து எடுத்தாள்?? ஏன் கல்யாண இறுதிவரை சென்று வேண்டாம் என்றாள்?? கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கும்போதும், "ஒருவேளை இதுதான் கடைசி முறையோ??" எனத் தோன்ற வேண்டும் அவளுக்கு??ஏன் சில SMS கள் வரவில்லை என்றவுடனும், தன்னை கோவா வர வேண்டாம் என்று சொன்னதும், கார்த்திக்கை சடுதியில் உதறினாள்?....
ஒரே முறை தான் கல்யாணம் நின்ற அன்று, கார்த்திக்கைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..அவன் அங்கே வந்தவுடன், " நீ கேட்ல இருந்து திரும்பி பார்த்தப்போ, I FELL IN LOVE..அடுத்த நாள் என்கிட்டே வந்து சொன்னப்போ, அது தெரிஞ்சிடுச்சோனு I FELT ANGRY...ஆனா, ட்ரைன்ல அன்னைக்கு நீ கிஸ் பண்ணப்போ, ட்ரைன் சத்தத்தை விட என் HEART BEAT தான் அதிகமா கேட்டுச்சு..அதான் உன்ன ALLOW பண்ணேன்" என CONFESS செய்கிறாள்..மற்ற காட்சிகளில், படம் எந்த புள்ளியிலும், ஜெஸ்சி மீது JUDGEMENTATIVE ஆக இல்லை..கார்த்திக்கோடு சேர்ந்து நாமும் "காற்றில் ஆடும் காகிதங்கள்" ஆகி ஜெஸ்ஸியின் INDECISIVENSS ஏற்படுத்தும் புயலில் சுழல்கிறோம்..கார்த்திக்கோடு சேர்ந்து, "இந்த உலகத்துல எத்தனயோ பொண்ணுங்க இருக்கறப்போ நான் ஏன் சார் ஜெஸ்சிய லவ் பண்ணே??" என சொந்த வாழ்க்கை ஜெஸ்சிகளை நினைத்து FEEL பண்ணுகிறோம்..
ஒரு SEQUNCE-ல் கார்த்திகோடு சினிமா தியேட்டரில் உட்கார்ந்து இருக்கும்போது கூட, ஜெஸ்சி "FRIENDS" ஆகிடலாம் என்பது போல கேட்பாள்,,,படம் முழுக்க அதே தான் அவளது சந்தேகம்!!! கார்த்திக் என்னும் தன்னை விட இரண்டு வயது குறைந்த வேற்று மத ஆணை, எந்த அளவில் ஏற்றுக் கொள்வது??? நண்பனாகவே?? இல்லை காதலனாகவா??? சில நேரங்களில் தராசு முள் போல, காதலிக்கலாம் என, சில நேரங்களில் நண்பன் என..காதலிக்கலாம் என்றால் தனது வாழ்க்கையின் CULTURAL FOUNDATIONS ஐ அசைக்க வேண்டுமே?? அதுவும் முடியாது..என தரை-நீர் என மாறி மாறி தாவும் மீன் தான் ஜெஸ்சியின் மனம்.."தனக்கு வலியுடன் வாழ பிடிக்கும்" என கார்த்திக் க்கு "ALL IS OVER..PLEASE FORGET ME" மெசேஜ் அனுப்பிவிட்டு அழுவதைப் போல!!!!
கார்த்திக் "ஒற்றைபடை" எண்ணம் கொண்டவன்...COFFEE SHOP ல் மறுபுறம் உட்கர்ந்திருக்கும் ஜெஸ்சியிடம், "இந்த பக்கம் என்னால உட்கார முடியல" என்றும், "கோட்டயத்துல நீ இருக்கும்போது, இங்க எனக்கு உன்ன கிஸ் பண்ணனும்னு தோணிச்சு..எனக்கு 80 வயசாகும் போதும் அப்படித்தான் தோணும்..I WANT TO MAKE LOVE TO YOU ALL TIME"..இதுதான் கார்த்திக்...
இந்த இரு பாத்திரங்களையும்...அவர்களது குணாதிசயங்களின் CARRIER ஆக்கி, இவர்களிடையே சுற்றி சுற்றி பரவும் REPERCUSSIONS ஐ, காட்டியதால் தான் இந்த படம் கௌதமின் ULTIMATE LOVE ஆனது...விட்டுப்போன காதலியைக் குறித்து "என்ன $$$@@## லவ் பண்றோம்?? என்று பாடிய நாயகனை வைத்து இவ்வளவு அழகான காதலைக் காட்டியதற்கே கெளதம் பாராட்டப்படவேண்டியவர் !!!!
"ஜெஸ்ஸி"கள் நிறைந்த உலகில் இந்த படமும், இந்தக் காதலும்...ETERNAL..

கெளதம் + காதல் (பகுதி இரண்டு)

-பகுதி இரண்டு (வாரணம் ஆயிரம்)
கௌதமின் காதலன் ஒரு வித்தியாசமானவன்...உடல் சார்ந்த இச்சைக்காக, பெண்ணை மடக்கி ஆக வேண்டிய அகஅரிப்புக்காக, இன்ன பிற லௌகீக சந்தோஷங்களுக்காக காதலிக்காமல், "காதல்" என்ற இன்பத்துக்காக, வாழ்நாள் முழுக்க காதலிக்கும் பொருட்டு காதலிக்க முனைபவன்..அவனுக்கு காதல் மீதுதான் காதல்..அவன் குடும்பத்தில் காதல் அவனது பெற்றோர்களுக்கு இடையே ஊடுபாவ ஓடிக்கொண்டிருக்கும்...அக்காதலை, அடி முதல் பகிர்ந்துக்கொள்ள பெற்றோர்களும் வாய்த்திருப்பார்கள்...அவனது அப்பா அவனுக்கு ரோல்மாடல்..அவர் செய்த காதலை இவனும் செய்ய வேண்டும்..இந்த நீர்க்குமிழி போன்ற காதல் ஒரு RANDOM பெண்ணைப் பார்த்தவுடன் முகிழ்க்கும்...காதல் என்பதை மறைபொருளாக, மற்ற விஷயங்களின் நடுவே திடுமென தெறிக்கும் மணிரத்னம் வகைமாதிரி இல்லாமல் காதல் என்பது வாக்கிங் செல்வது போல, காஃபி குடிப்பது போல, சினிமா பார்ப்பது போல ஒர் அனுபவித்து செய்ய வேண்டிய செயல்பாடு..


இதனாலே கௌதமின் காதலர்களும்..ஏன் கௌதமே கூட ELITIST வகையறாவாகத் தோன்றும்..யோசித்துப்பாருங்கள், மூன்று வேளை சாப்பாடே கிடைக்காத ஒருவன், எப்படி மூச்சு முட்ட காதலிப்பான்?? அவன் வேலைக்கு சென்று தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பவன் எப்படி மூழ்குவான்?? போய் காதலைத் தெரிவித்தவுடன், "இல்ல..எங்க அப்பா பாக்குற பையனைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்", "நீங்க என்ன CASTE??", இன்னபிற கேள்விகளை வீசும் பெண்களை (இயல் வாழ்க்கையில், அதுதான் கதி என்றாலும்) FULL JOSH ஓடு அணுகினாலும், காற்று போன பலூன் மாதிரி தானே ஆகுவோம்..SO, கௌதமின் காதலர்களுக்கு EXTRINSIC PRESSURES, LIVELIHOOD SHORTCOMINGS அறவே கிடையாது (விடிவி தவிர)..காதல் என்பது இருவரது, இருவர் மட்டும் உணரக்கூடிய ஆத்மார்த்த உணர்வு..100% UNADULTERED LOVE WITH NO CONFOUNDING FACTORS..
காதலை பார்வையாளரிடம் கடத்துவது எப்படி?? அதற்கு கெளதம் பயன்படுத்திய உத்தி, MONOLOGUE... சினிமா பாஷையில் VOICE OVER..ஒருவனது அகரீதியான காதல் உணர்வை சொல்ல, பார்வையாளர்கள் - கதாபாத்திரம் இடையே உள்ள நுண்திரையை தகர்த்து, அதாவது BREAKING THE FOURTH WALL..என உரையாடுவது..மேக்னாவை சூர்யா பார்த்த, பார்த்தவுடன் காதலில் விழுந்த நொடியை அப்படியே பரிமாறுவது.."அந்த நிமிஷம்..அந்த நிமிஷம் டாடி..ஒரு தண்டர்போல்ட் மாதிரி, அம்மா மேல உங்களுக்கு லவ் வந்த மாதிரி..ஒரு இளையராஜா பாட்டு மாதிரி.." என அந்த TRAIN SEQUENCE எபிக் ஆனது இப்படிதான்..பார்க்கும்போதே, சமீரா ரெட்டியை (பின்னாளில் நாம் தெறித்து ஓடிய அதே சமீராவை) நாமே காதலிக்கும் பிரமையை ஏற்படுத்துவது..
PROPOSE செய்ய கெளதம் நாயகன் யோசிப்பதில்லை..நேரடியாக, I WILL SWEEP OFF YOUR FEET என்று தன் மேல் உள்ள நம்பிக்கையில், தான் சிறந்த காதலன் என்ற நம்பிக்கையில் சொல்வான்..ஆனால், "வாரணம் ஆயிரத்தில்" கெளதம் "அலைபாயுதே" தாக்கத்தில் PURSUIT OF LOVE அதாவது காதலைப் பொருட்டு எவ்வளவு தூரம், எந்த மூலைக்கும் செல்லலாம் என வகைமை ஏற்படுத்தினார்.."கலிஃபோர்னியா...இங்க இருக்கு" என அவன் அப்பா சொல்ல, காதலை தேடி, அலைந்து, வெளியுலகில் பைத்தியகாரத்தனம் என சொல்லக்கூடிய ஒன்றை, அதுவும் ஒரு RANDOM LOVE AT FIRST SIGHT க்காக செய்வான்..அங்கே, தன் காதலியுடன் நேரம் செலவிட்டு, காதலைப் பெறுவான்..தன் காதலை மேக்னா சொன்னவுடன், "இங்க என்கிட்டே உனக்கு கொடுக்க எதுவுமே இல்ல.." எனத் தேடி அழகான பூக்களைப் பறித்து தரும் காட்சி...ம்ம்..டிவைன்..
பின், நடப்பவை எல்லாம் கதையின் ஓட்டத்தில் ஓடக்கூடிய சம்பவங்கள்...ஆனால், படம் எப்படி இருந்தாலும் அந்த அழகான பூக்களைப் போன்றொரு காதலை நம்மால் இன்று வரை நினைவில் வைத்துக் கொள்ள வைத்ததே கௌதமின் காதல் மேலுள்ள காதல் தான்..
கௌதமின் MAGNUM OPUS "விண்ணைத்தாண்டி வருவாயா??" வை வேறொருபதிவில் காண்போம்..

கெளதம் + காதல்

-பகுதி ஒன்று
கௌதமைப் பற்றி எழுதக் கூடிய MINDSET ல் இல்லாவிடினும், இன்று சுந்தர் ஸ்ரீனிவாஸ் எனும் கௌதம் "உபாசகர்" எழுதிய பதிவைப படித்து INSPIRE ஆகி எழுதி மனதில் அலையாடும் எண்ணங்களை பதிவு செய்ய எழுதுகிறேன்..
இயக்குனர் மகேந்திரன் ஒரு பேட்டியில், "உலக அளவுல எவ்வளவோ மாறிடுச்சு..நம்மூர்ல என்னன்னா காதலை எப்படி சொல்றதுங்கறலேயே இன்னமும் படம் எடுத்துகிட்டு இருக்கோம்..வெளிநாட்டுலேருந்து யாராச்சும் பாத்தாங்கன்னா இவனுங்களுக்கு இதைத் தாண்டி வேற பிரச்சினையே கிடையாதான்னு தான் நினைப்பாங்க" என்றார்..ஆனால் பாருங்கள், இன்றும் CRUSH என்ற விளங்கவியலா உறவை நினைத்து மருகும் எண்ணற்ற பதிவுகளை நூற்றுக்கணக்கில் பார்க்கிறோம்..மேலைநாடுகள் அளவிற்கு "கட்டற்ற" காதலும் அதன் உடல் சார்ந்த தணிதலும் இங்கு சாத்தியப்படாதவரை, பெண்களிடம் பேசவே "பேபேபே" என குளறும் ஆண்கள் உள்ளவரை, திருமணம் என்ற ஒற்றைவாசல் வழி மட்டுமே பெண்களை ஓரளவு அறிய முடிந்த பெரும்பான்மை ஆண்கள் உள்ள வரை "காதல்" தான் இங்கே செல்லுபடியாகும் முக்கிய கச்சாப்பொருள்..
காதல் என்பது 80- களின் இயக்குனர்களுக்கே ஒரளவு பிடிபட்டது..எம்.ஜி.ஆர் சரோஜாதேவியின் தோள்பட்டையை அமுக்குவதும், தன் உதட்டை கடித்துக் கொள்வதும், சிவாஜி முகத்தால் மட்டுமே காதலிப்பதும் காதல் இல்லையா?? என நீங்கள் கேள்வி எழுப்பினால், உங்கள் வயது APPROXIMATELY 60 என எடுத்துக் கொள்ளலாம்...
தமிழ் சினிமாவின் காதல் வரலாற்றை அப்படியே SKIP செய்து, மணிரத்னம் என்ற இளைஞரின் வருகையை கணக்கில் கொண்டால் (அதற்கு முன் ஸ்ரீதர்) அது வரை "காதல்" பெயரளவில் மாத்திரம் இருந்தது..மணிரத்னமும், "மௌனராகம்", ரோஜா, பாம்பேயில் சில காட்சிகள், அலைபாயுதே தவிர்த்து மிதியில் PLASTIC பூக்களையே செய்தார்..மணிரத்னத்தின் காதல் குறித்த பார்வையை வேறொரு பதிவில் பார்ப்போம்...பிறகு ஏன் அவரை MENTION செய்தேன் என்றால், "அலைபாயுதே" வில் மாதவன் ஷாலினியைத் தேடி கேரளா சென்று அங்கே "காதலை" ஸ்பரிசிக்கும் ஏகாந்த காட்சியில் INSPIRE ஆனா இளைஞன் ஒருவன் பின்னாளில்,காதலை தனது பிரத்யேக அடையாளமாகக் கொண்டு படம் எடுக்க வந்தான்..அவன் கெளதம்..
முதல் படமான "மின்னலே" என்னளவில் புறவயமாகவே காதலை சொன்னது..ரீமாவின் மாதவன் மீதான காதலுக்கு CONFLICT..மாதவன் வேறு அடையாளத்தில் வந்தது..கிளைமாக்ஸ் கூட அக்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றுதான்..காதல் காட்சிகள் FRESH ஆகத் தெரிந்தது, படத்தில் பூத்துக் குலுங்கிய இளமை இரண்டும் PROMINENT ஆகத் தெரிந்தது..
இரண்டாம் படமான, "காக்க காக்க" வில் தான் NEW FORM OF ROMANCE தென்பட்டது...மையக் கதை வேறு என்றாலும் அன்புச்செல்வன்-மாயா, இருவர் இடையிலான காதல், அது அரும்பிய விதம், எந்தப் புள்ளியில் தான் காதல் வயப்பட்டிருப்பதாக அன்புச்செல்வனுக்கு புரிகிறது, அதனை வெளிபடுத்தும் விதம், ஏன் தன்னை புடித்தது என்ற கேள்விக்கு " ITS A WOMAN THING" என்று மாயா சொல்வது, "இப்படியே இருக்கணும் போலத் தோணுது" என மாயா சொல்லும் தருணம் என ஒருவித MATURED LOVE க்கு தமிழர்களை அறிமுகப்படுத்தினார்..
அடுத்து, "வேட்டையாடு விளையாடு" வில் MATURED ROMANCE ன் அடுத்த பக்கத்தை புரட்டினார் கெளதம்..ராகவன் ஆராதனாவை சந்திக்கும் முதல் காட்சியில் அவள் தற்கொலைக்கு முயல்வாள், பின்னர் மெல்ல மெல்ல பழக்கம் ஏற்படும், பரஸ்பரம் இருவரும் புரிந்து..அதாவது ஆராதனாவை ஏற்றுக்கொள்ள ராகவன் முன்வரும் பொது, அவளுக்கு, தயக்கம்...தமிழ் சினிமாவில் அதுவரை SEPARATED WOMEN கள் அனுதாபத்துக்கு உரியவர்கள்..நாயகன் பாதுகாக்கவே படைக்கப்பட்டவர்கள்..அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் அரிதாகவே கிடைக்கும்..இதில் ராகவன் வேண்டுகோள் விடுப்பதும் அதனை ஆராதனா அணுகுவதும் ரொம்பவே MATURED..இறுதியில், அவர்கள் சேர்வதும், எந்த "திடுக்" திருப்பமும் இல்லாமல் மரத்தில் இருந்து இலைகள் விழுவது போலவும், பூ விரிவது போல இயல்பாகக இருந்தது...
"பச்சைக்கிளி முத்துச்சரம்" இயல்தளத்தில் இருந்து விலகி ரொம்பவே EXOTIC ஆக இருந்தது..காரணம், "DERAILED"...சில காட்சிகளைத் தவிர கெளதம் முழுதும் வெளிவரவில்லை..
இதுவரை கெளதம் காதலை அணுகியது ஒரு PATTERN. இந்த வடிவமைப்பில் இருந்து மேலெழும்பி வேறு PATTERN க்கு சென்றதைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்..